Tuesday, 6 September 2016

பஞ்சு அருணாசலம்

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா

என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

Sunday, 10 April 2016

திருப்புமுனையான திருப்புறம்பயம் போர் - விஜயாலயச் சோழன்















சோழர்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருப்புறம்பயம் போர் 
இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவ மன்னன் அபராஜிதவர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண வர்மனுக்கும் இடையில் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடைபெற்றது.இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும் பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரிட்டனர்.அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரிதிவீபதி வந்திருந்தான்.இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப்படையின் மாதண்ட நாயக்கராக போரிட்டான்.அந்த நேரத்தில் விஜயாலயச் சோழன் இரு கால்களும் செயலிழந்த நிலையில் தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண பல்லக்கில் சென்றிருந்தார்.அங்கே போர் முகாமில் பல்லவ-சோழப் படைகள் கிட்டத்தட்டதோல்வியடைந்து சரணடையும் முடிவுக்கு வந்ததை கேள்விப்பட்டு கோபமடைந்த விஜயாலயர் (அப்போது அவருக்குவயது கிட்டத்தட்ட 90) இரு வீரர்களின் தோளில் ஏறிக் கொண்டு போருடைப் பூண்டு வாளினை சுற்றிக் கொண்டு களமிறங்கினார்.இதுகண்ட சோழப்படை மீண்டும் வீறாப்புடன் போராடி வெற்றிபெற்றது.கங்க மன்னன் பிரதிவீபதி அன்றைய போரில்வீர சொர்க்கம் எய்தினான். இப்போரின் மூலம் சோழர்கள் முத்தரையர்களை ஒழித்து தஞ்சையை தன் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது.

Monday, 4 April 2016

Mobile

என்ன ஒரு தலைப்பு
யாருக்கும் கிடைக்காத தலைப்பு
கைப்பேசி !!!
யாருக்கு தான் பிடிக்காது
வண்ணத்தில் வடிவத்தில்
எண்ணத்தின் செயல் திறனை
பன்மடங்கு பயன் உள்ளதாக்கும் கருவி


இப்போது உள்ள தலைமுறையினருக்கு
கைப்பெசியே முதலாம் கருவி !!
இரெண்டாவது எண்ணம்,
சிலருக்கு மூன்றாவது கண்,
அதுவே நான்காவது பொருள்
போற்றும் ஐந்தாம் மறை
பலருக்கு ஆறாம் விரல் 
கொடுக்கும் ஏழாவது சுவை
இசைக்கும் எட்டாவது சுவரம்
திசையில்  ஒன்பதாவது முனை

என ஒப்பற்ற ஆற்றல் உடையது.

ஏய் கைப்பேசி !! நீ எங்கு இருந்து உதித்தாய்
இத்தனை நூற்றாண்டுகளாக எங்கு இருந்தாய் 
மொபைலே மொபைலே நீ யாரோ 
தொலைபேசியே உனக்கு தாயாரோ
உலகம் தோன்றியது 4.5 கோடி வருடங்களுக்கு முன்பு, 
மனித இனம் தோன்றியது 2 லட்சம் வருடங்களுக்கு மன்பு,
தீயை உபயோகித்தது 1.5 லட்சம் வருடங்களுக்கு மன்பு,
இப்படி தீ, சக்கரம், மண்பாண்டம், மின் ஆற்றல், கணினி 
என்று ஒவ்வொன்றிக்கும் பரிணாமம் எடுத்துகொண்டது எத்தனை வருடங்கள்
ஆனால் நீயோ அடைத்து வைத்த ஆற்றல்
எறிமலையாய் வெடிப்பது போல் உதிர்த்தாய்

நீ மட்டும் வள்ள்ளுவனின் கையில் இருந்திருந்தால்
திருக்குறள் அன்றே உலக மொழி அனைத்திற்கும்
மொழி பெயர்க்க பட்டிருக்கும்,
இயேசுவின் கையில் இருந்திருந்தால்
14வது சீடனாக பிரகடனம் செய்திருப்பார்
நபியின் கையில் இருந்திருந்தால்
நன்னெறி திருக்குரான் உன் வழியாக போதிக்க பட்டிருக்கும்
புத்தனின் கையில் இருந்திருந்தால்
விகாரங்களில் உன்னை நிறுவி இருப்பார் (செல் போன் கோபுரங்களுடன்)
ரோமனின் கையில் இருந்திருந்தால்
போரின்றி உலகை ஆண்டிருப்பான்

எத்தனை சரித்திரங்கள் உன்னால் மாற்ற பட்டிருக்கும் 
எட்டப்பனின் காட்டி கொடுத்த உரையாடலை உளவறிந்து 
கட்டபொம்மன் வென்றிருப்பான் 
சீதையின் கைப்பேசி அலைவரிசையை வைத்து 
இராமன் இராவணனை வதைதிருப்பான் 
இயற்கை சீற்றத்தை கைபேசி மூலம் முன்பறிந்து 
மாயன், போம்ப்பே, பார்சிலோனா, ரோமானிய, கிரேக்க, ஆதிச்சநல்லூர் 
போன்ற தொன்மையான அழிந்த நாகரிகங்கள் மீண்டிருக்கும் 
எல்லோரவில் தீட்டிய வண்ணம் 
paint brush மூலம் மெருகேற்ற பட்டிருக்கும் 
பைசா வின் கோபுரம் smart utility tool மூலம் நிமிர்ந்திருக்கும்

கருப்பு வெள்ளையை விட்டு நிகழ் காலத்திற்கு வருவோம்
ஒரு கருவி ஓராயிரம் பயன்பாடு
அறத்திற்கும் ஆன்மீகத்திற்கும் (to be included )
சமூக தொடர்புக்கு முகநூல்
சிந்தனை பதிவிற்கு blogger
குறும் பதிவிற்கு whatsapp
குறும்பு பதிவிற்கு twitter
ரௌத்திரம் பழக angry birds
ஓடிவிளையாட temple run
கூடி விளையாட clash of clans
பல்லுயிர் பேன talking tom
முகம் பார்க்க கண்ணாடி பார்ப்பது அந்த காலம்
இன்று பார்ப்பதோ கைபேசியில் இருக்கும் front cam இல்
சித்தரமும் கை பழக்கம் போய் கை பேசி பழக்கம் என்றானது
முன்பு மதுரைக்கு வழி வாயில் என்பார்கள்
இன்று உலகிற்கே வழி காட்ட ways  என்கிறார்கள்
இப்போதெல்லாம் நேரத்தை பார்க்க
கை கடிகாரத்தை யாரும் பார்த்ததாக இல்லை,
கைபேசியிலேயே SGT , MYT, IST , GMT  என்று
இப்போழுதில் உலக நேரத்தை ஒப்பிடுகின்றார்கள் 
வெள்ளித்திரையை கைபேசி youtube இல் பார்த்தது போக
கைபேசி camera வில் படம் எடுத்து, பதிவேற்றி, வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு இயக்குனறாகவும் தயாரிப்பாளர் ஆகவும் தேர்ந்து விடுகிறார்கள்.
கல்வெட்டு, செப்பேடு, பனைஓலை, கரும்பலகை, தாள், நூல்,
என்று இதனை வருடங்களாக பயன் படுத்தியதை
தூக்கி எரிந்தது கைபேசி என்று சொன்னால் மிகையாகது


இப்படி பட்ட கைபேசியின் குறை பாட்டை பற்றி நானே எப்படி பேச.
நடுவர்களே, ஆசிரியர்களே, சான்றோர்களே, நாட்டமைகளே ....
தயவு செய்து தலைப்பை திருத்தி வையுங்கள்
கைபேசி என்றுமே குறைபட்டதில்லை
"கைபேசியின் பயன்பாடும், பயன்பாட்டின் குறைபாடும்" என்று மாற்றி எழுதுங்கள்
ஆம் நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எரிவது வீணையின் குற்றமல்ல, வீணாக புழுதியில் விட்ட வீணர்களின் குற்றம்.
இப்படி பட்ட பேராற்றல் கொண்ட வருவியை
தவறாக பயன்படுதுவரும் சிலர் உண்டு.
குறிப்பாக சிறுவர்கள் போழுதன்றிற்கும் கைபெசியிலேயே நேரத்தை செலவிடுவதை குறைக்க வேண்டும்.