Thursday, 13 March 2014

தமிழ் வஞ்சிக்காது, வாழ வைக்கும்.

'விதவை' என்று எழுதுகிறேன் 
எழுத்தில் கூட பொட்டு 
வைக்க முடியவில்லை.
சமுதாயம் மட்டுமல்ல 
மொழி கூட உங்களை
.......வஞ்சித்துவிட்டது.

( ஆனந்த விகடனில் 1985ல் பிரசுரிக்கப்பட்டது )

இதை அன்றே விமர்சனம் செய்து 'கலைஞர்' எழுதியது.

'விதவை' என்பது வடமொழிச்சொல்
தமிழில் 'கைம்பெண்' என்று எழுதினால்
ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்
தமிழ் வஞ்சிக்காது, வாழ வைக்கும்.

No comments:

Post a Comment