பொரிந்த காரை கரிந்த சூரை புகைந்த வீரையெ ரிந்த வேய்
உரிந்த பாரை எறிந்த பாலை உலர்ந்த ஓமை கலந்தவே.
உதிர்ந்த வெள்ளில் உணங்கு நெல்லி ஓடுங்கு துள்ளி உலர்ந்த வேல்
பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ளி பிளந்த கள்ளி பரந்தவே.
வற்றல் வாகை வறந்த கூகை மடிந்த தேறு பொடிந்த வேல்
முற்றல் ஈகை முளிந்த விண்டு முரிந்த புன்கு நிரைந்தவே.
No comments:
Post a Comment